Posts

மதுகுப்பியின் மேல் படர்ந்து இருக்கும் கொட்டலசு (Barnacle)

Image
கொட்டலசு (Barnacle) என்பது கணுக்காலி வகையைச் சார்ந்த ஓட்டுடலிகளில் ஒன்றாகும். இது நண்டு மற்றும் இறால் ஆகிய இனங்களுடன் நெருங்கிய தொடர்புடையவையாக உள்ளன. பரிணாமத்தில் பல இலட்சம் ஆண்டுகள் மூத்த இந்த உயிரிகளின் இளம் உயிரிகள் கடலில் மிதக்கும் பொருட்களின் மேலும், கடல் நீரில் நிறுவப்பட்டு இருக்கும் தூண்களின் மேலும், பாறைகளின் மேலும் பாசிகளைப் போன்று படர்ந்து ஒட்டிக் கொள்ளும்.  இது உயிருள்ள கடலாமை, திமிங்கலம் போன்ற பேருயிர்கள் முதல் சிறிய நண்டினங்கள் மேல் கூட ஒட்டிக் கொண்டு உயிர் வாழும். ஒருமுறை இவை ஒரு உயிருடன் தன்னை ஒட்டிக் கொண்டு உயிர் வாழ ஆரம்பித்தால் அதன் வாழ்நாள் முழுதும் அதனுடனே வாழும். துறை முகங்களில் நீண்ட நாட்களாக கப்பல்களின் அடிபகுதியில் முழுதும் படர்ந்து விட்டால் சில நேரம் கப்பல்கள் கூட  நகர முடியாமல் போய் விடும். அதன் வாய் போன்ற பகுதியின் வழியாக கடலில் மிதக்கும் நுண் உயிரிகளை உணவாக உட்கொள்ளும். படத்தில் காண்பது கடலில் வீசி எறியப்பட்ட மதுகுப்பியின் மேல் படர்ந்து இருக்கும் கொட்டலசு (Barnacle).

தாமிர, வெங்கல மற்றும் பித்தளைப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது நல்லதா?

 தாமிரத்தால் (காப்பர் Cupper) செய்த சொம்பு. இதில் தண்ணீர் குடித்தால் நல்லது. வீட்டுக்குக் கொண்டு போங்கள்" என என்னிடம் உறவினர் ஒருவர் தந்தார்."நான் சிரித்தவாறே வேண்டாம்" என்றேன். "ஏன்? வேண்டாம் என்கின்றீர்கள். உடம்புக்கு நல்லதுங்க" என்றார். "இது எங்களுக்குச் சரிப்பட்டு வராது. வேண்டவே வேண்டாம்" என்றேன். "காசு கொடுக்கத் தேவை இல்லை. இலவசமாகத்தான் தருகிறேன் கொண்டு போங்கள்" என்றார். "சின்னப் பிள்ளைகள் உள்ள வீடு எங்களுக்குத் தாமிர பாத்திரங்கள் சரிப்படு வராது " என்றேன். "சின்னப் பிள்ளைகளுக்கும் இது நல்லதில்லையா?" எனக் கேட்டார். "அப்படி அல்ல. இந்த பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு, கரைத்த புளி, புளித்த தயிர் போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருள்களை வைத்தால் விசமாக மாறிவிடும். இதனைக் குடித்தால் வாந்தி பேதியாகும். ஏன்? உயிரிழப்புக்குக் கூட வாய்ப்புள்ளது" என்றேன். சற்று அதிர்ந்தார். "உண்மையாகவா?" என்றார் ஆச்சரியமாக. "ஆமாங்க.. மயில் துத்தம் கொடூரமான நஞ்சு. மயில் துத்தம் என்பது தாமிரத்தால் ஆன ஒரு உப்பு. இது மயில் கழுத்து...

CURRENT ELECTRICITY

MATHEMATICAL TOOLS IN PHYSICS